யாழில் ஆணின் சடலம் மீட்பு
யாழில் ஆணின் சடலம் மீட்பு ,யாழ்ப்பாணம் மன்கும்பான் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
அப்பகுதி வசித்த மக்கள் போலீசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் ஊர்காவல்துறை போலீசாரிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட ஆணினுடைய மனித சடலம் தற்போது யாழ்ப்பாண போதனை வைத்தியசாலையில் அனுப்பி
மரணப் பரிசோதனைகள்
வைக்கப்பட்டு, மரணப் பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பகுதி எங்கும் தொடராக இவ்வாறான மனிதச் சடலங்கள் மீட்கப்பட்டு வருகிற சம்பவத்தின் பின்புலத்தில், இலங்கையினுடைய நிழல் உளவு பிரிவுகள் ஈடுபடலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்தப் படுகொலையின் பின்புலத்தில் உள்ளது யார்
இந்தப் படுகொலையின் பின்புலத்தில் உள்ளது யார் ஏன் இவ்வாறு இடம்பெறுகிறது என்பது தொடர்பாக, இதுவரை எவ்வித முடிச்சுகளும் அவிழ்க்கப்படவில்லை.
தமிழர்களை அச்சுறுத்துகிற வகையில் இந்த படுகொலைகள் இடம்பெறுகிறதா என்ற சந்தேகத்தை ,மேற்படி தொடர்ப படுகொலைகள் ஏற்படுத்தியுள்ளதாக சமூக நலவாதிகள் கருத்துரைத்து வருகின்றனர்.












