மது போதைக்கு 65பேர் பலி

மது போதைக்கு 65பேர் பலி
Spread the love

மது போதைக்கு 65பேர் பலி

மது போதைக்கு 65பேர் பலி ,மது போதைக்கு அடிமையான நிலையில் மாதம் ஒன்றுக்கு 65 பேர் பலியாகி வருவதாக, புதிய புள்ளி விவரங்கள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது .

அதிக மது பாவனை

இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் அதிக மதுபாவனை அதிகரிப்பின் காரணமாக ,நாளொன்றுக்கு இரண்டுக்கு மேற்பட்டவர்கள் குடிபோதை யில் இறந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது .

வருடம் ஒன்றுக்கு இலங்கையில் இந்த குடிபோதையினால் ,23 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாக வருவதாக தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுக்கடங்காது மது போதை களியாட்டங்களில் ஈடுபட்டு வருவதனால், ஈரல் கருகி பாதிக்கப்பட்ட நிலையில் இவ்வாரணம் மரணங்கள் சம்பவித்து வருகின்றன.

மது போதைகள் ,சாராயம் விற்பனை

நாள் ஒன்றுக்கு இலங்கையில் 242 மில்லியன் ரூபாய்க்கு மேல் மது போதைகள் ,சாராயம் விற்பனையாகிறது .

இதில் பாதி அளவு பணத்தினை ஆளுகின்ற அரசு வரியாக பெற்றுவிடுகிறது.

அதனால் நாடும் மக்களும் எக்கேடு கெட்டுப் போனால் என்ன ,எங்களுக்கு வரி மட்டும் வந்தால் போதுமான நிலையில் ,மதுபானத்தை அதிகமாக அரசு விற்பனை செய்வதற்கு பல கடைகளை திறந்து அதை வியாபாரத்தை மேற்கொண்டு வருகிறது.

இதனால் நாடெங்கும் 65 பேர் மாதந்தோறும் பலியாகி வருகின்ற செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.

குடி மகன்களினால் குடிகள் சீரழிகின்ற அதே வேளையில் ,தற்பொழுது புதிய சந்ததியும் புதிய சீரழிவான கலாச்சாரத்துக்கு சிக்கி வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிக்கலை தடுப்பது எப்படி இதிலிருந்து மக்களை மீட்பது எப்படி என்பது தான் ,தற்பொழுது மக்கள் சமூகவாதிகள் சிந்தித்து வருகிறார்கள்.