12வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்
12வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் ,கொழும்பு மியூசியஸ் கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்கும் 16 வயதுடைய சிறுமி பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து தவறி
விழுந்து சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று (10) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பொரளை, சர்ப்பன்டைன் வீதியைச் சேர்ந்த சிறுமி, ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சிறுமி மன உளைச்சலுக்கு சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக அவரது தாயார் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சிறுமி பால்கனியில் இருந்து குதித்தாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.













