ஜனாதிபதியின் வீட்டுக்குத் தீ
ஜனாதிபதியின் வீட்டுக்குத் தீ ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது கொள்ளுப்பிட்டியில் அத்துமீறி நுழைந்து அவரது வீட்டில் இருந்த
சொத்துக்களை சேதப்படுத்தி வீட்டுக்குத் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நவுட்டுடுவ கிரந்திடிய பிரதேசத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் (36) ஆசிரியர் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இப்போராட்டத்தின் போது, கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இரவு, கொள்ளுப்பிட்டியில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள்
பலவந்தமாக நுழைந்த போராட்டக்குழுவினர் அவரது சொத்துக்களைத் தாக்கி தீயிட்டு சேதப்படுத்தியுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்ட நபர்
இச்சம்பவம் தொடர்பாக 25க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலை அடுத்தே மேற்படி விடயங்களை தூசி தட்டப்பட்டு நடத்த பட்டு வருகிறது .















