50000 பேருக்கு காணி உறுதி
50000 பேருக்கு காணி உறுதி ,காணி உரிமைப் பத்திரங்கள் மற்றும் அனுமதிப் பத்திரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ‘ஹிமிகம’ தேசிய திட்டம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, கிளிநொச்சி – பளை மத்திய கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தலைமையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தினூடாக ஆண்டு இறுதிக்குள் 50,000 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில், மோதலால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இதனிடையே, முப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 105,045 ஏக்கர் காணியில் 91% விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சுனில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும் 26,330 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ளன.
வனவள திணைக்களம் மற்றும் பிற அரச நிறுவனங்களின் கீழ் உள்ள காணிகளும் இவற்றில் அடங்குவதுடன், எல்லை திருத்தங்களுக்குப் பின்னர் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் மீள கையளிக்கப்படும் என அவர் முன்னதாக தெரிவித்தார்.
அரசியல் மற்றும் சட்ட சவால்கள் இருந்தபோதிலும் நீண்டகால காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பிரதியமைச்சர் சுனில் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்







