49 குடும்பங்கள் பலவந்தமாக வெளியேற்றம்
ஹல்துமுல்ல, கொஸ்லாந்த மீரியபெத்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தின் இருபுறங்களிலும், அவதானமிக்க வலயத்தில் வசித்துவந்த மக்களை, அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுத்திய போதிலும், அந்த அறிவுறுத்தலை
கணக்கிலெடுக்காது, அங்கு தங்கியிருந்த 49 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், பொலிஸாரின் தலையீட்டுடன் பலவந்தமாக திங்கட்கிழமை (16)
வெளியேற்றப்பட்டனர் என ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் கே.ஏ.ஜே.பிரியங்கணி தெரிவித்தார்.
49 குடும்பங்கள் பலவந்தமாக வெளியேற்றம்
காய்கறி தோட்டங்கள், கோழிகள், ஆடுகள், மாடுகள் மற்றும் பிற விலங்குகளை விட்டுவிட்டு தாம் வசிக்கும் இடங்களை விட்டு வெளியேற அம்மக்கள் தயக்கம் காட்டுவதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
இந்த அபாயங்கள் தொடர்பில் அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்ட போதும் அதனை பொருட்படுத்தாது தொடர்ந்தும் அங்கு தங்கியிருந்ததாக ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் கே.ஏ.ஜே. திருமதி பிரியங்கனி மேலும் கூறினார்.
மீரியபெத்த மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையுடன் மண்சரிவு ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறிகளின் பின்னணியிலும்,
எதிர்வரும் நாட்களில் கனமழை பெய்யும் என்ற முன்னறிவிப்பிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- டிரம்ப் நெதன்யாகு திடீர் சந்திப்பு
- வடக்கு ஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்
- சவூதி ஓமன் ஈரானுடன் பேச்சு
- சவுதி எண்ணெய் வயல்கள் மீது ஈராக் தாக்குதல்
- டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை
- ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறது
- யானை தாக்குதல் முடிவு சீனா அமைக்கும் மூங்கில் வேலி
- மனித யானை மோதலில் பலர் உயிரிழப்பு
- SJB எம் பி சமிந்த விஜேசிரிக்கு 18 மாத சிறைத்தண்டனை
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்
















