24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான 13 வாகன விபத்துகளில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிரிபாவ, இங்கிரிய, புவரசங்குளம், அநுராதபுரம், பொரளை, பதியத்தலாவ மற்றும்
ஹபரணை ஆகிய பகுதிகளில் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், ஆனமடுவ, நவகுருதுவத்தை, இரத்தினபுரி, அங்குனகொலபெலஸ்ஸ, கிளிநொச்சி மற்றும் வெலிக்கடை ஆகிய இடங்களில் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
உயிரிழந்தவர்கள் 12 வயதுக்கும் 78 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும்
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.






