2019 ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபருக்கு பதிலளித்தார் ஜனாதிபதி

2019 ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபருக்கு பதிலளித்தார் ஜனாதிபதி
Spread the love

2019 ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபருக்கு பதிலளித்தார் ஜனாதிபதி

2019 ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபருக்கு பதிலளித்தார் ஜனாதிபதி ,2019 ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் நேரடியாகப் பேசிய போது, அதிகாரிகள் நீதி வழங்கத் தவறியமை குறித்து தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.

நேற்று நீர்கொழும்பு கடுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்திருந்த போது அவரிடம் கேள்விகளை முன்வைக்கும் சந்தர்ப்பத்தின் போதே குறித்த நபர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் நீதித்துறை சுதந்திரமாக இல்லை. இது அரசியலின் கீழ் உள்ளது. இந்நாட்டின் அரசியலால் நான் வெறுப்படைந்துள்ளேன். இப்போது இவ்விடத்தில் எங்களை மிருகங்களைப் பரிசோதிப்பது போல் சோதிக்கின்றனர்.

அனைவருக்கும் தெரியும் இங்கு யார் வருகின்றார் என. ஆனால் உங்களால் எனது பிள்ளையைத் தர முடியுமா? என் பெற்றோரைத் தர முடியுமா?

அன்று நடந்த சம்பவத்தை (ஈஸ்டர் தாக்குதல்) முழுமையாக தடுத்திருக்கக் கூடிய வாய்ப்பு இருந்தது. அது குறித்து நீங்களும் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

எனவே இதுபோல் அல்லாத ஒரு முறைமையை உருவாக்கித் தாருங்கள் என்பதைத் தான் நான் கேட்கிறேன் என குறித்த நபர் ஜனாதிபதியிடம் கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஜனாதிபதி திஸாநாயக்க, உயர் அரசியல்வாதிகளின் விசேட பாதுகாப்புப் பிரிவினருக்கு மட்டுமே தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதாகத் தெளிவுபடுத்தினார்.

அப்போது பாராளுமன்றத்தில் இருந்த தனக்கும் தனது சக கட்சி உறுப்பினர்களுக்கும் அவர்களின் ஆட்சிக் காலத்தில் சிறப்புப் பாதுகாப்பைப் பெறவில்லை என்பதை அவர் நினைவுபடுத்தினார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான வழிகளை கோடிட்டுக் காட்டிய ஜனாதிபதி, முதலில் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை விசாரணைகள் மூலம் கண்டறிந்து அதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்றார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தல் இரண்டாவதாகும்.

இறுதியாக, அரசியலால் இந்த அமைப்பு தோல்வியடைந்தால், தோல்வியடைந்த அமைப்பை அரசியலின் மூலம் மறுசீரமைக்க வேண்டும், ஏனெனில் இந்த அமைப்புகள் முறைமைகள் (சிஸ்டம்) அரசியல் இன்றி திருத்தப்பட்ட நடைமுறைப்படுத்தப்பட இயலாதது.

ஏனென்றால் இவை எல்லாம் அரசியலை மையமாகக் கொண்டே இயங்குகின்றன என ஜனாதிபதி பதிலளித்தார்.