யார் நீ

யார் நீ
Spread the love

யார் நீ

கல்லறை மேனியர் கண் திறப்பாரோ
கயவரை இங்கே கால் நசிப்பாரோ
நெஞ்சத்து ஊழ் வினை வந்தழிப்பாரோ
நேயத்தை இங்கே நட்டு வைப்பாரோ

கொடியான பகைவரை கொன்றிடுவாரோ
கொள்ளை புறத்தில் நின்றிடுவாரோ
எல்லை தாண்டி வந்தவர் யாரோ
ஏரி தணலாய் கொதிப்பவர் யாரோ

வந்து படையில் இணைந்தவரை
வழி வஞ்சித்தல் இங்கு முறையோ
கொஞ்சி தமிழ் கவி பேசினாலே -அவர்
கொள்ளையர் என்று நீ சொல்வதோ

எந்த தமிழ் நீ பாடினாய்
ஏனடா எம்மவர் இழித்தாய்
நஞ்சுடல் கொண்டவர் நீயோ
நக்கி பிழைக்கின்ற நாயோ

அஞ்சுதல் பெண் இங்கு முறையோ
அடக்கிட நினைப்பது சரியோ
இழித்தல் இன்று உந்தன் விதியோ
இடர் சுடுகாட்டு நீயென்ன நரியோ ..!

ஆக்கம் 04-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )
கவிதை ,kavithai ,kavithaigal ,கவிதைகள்,