மோடி அனுரா முக்கிய பேச்சு ஒப்பந்தம் கைச்சாத்து

மோடி அனுரா முக்கிய பேச்சு ஒப்பந்தம் கைச்சாத்து
Spread the love

மோடி அனுரா முக்கிய பேச்சு ஒப்பந்தம் கைச்சாத்து

மோடி அனுரா முக்கிய பேச்சு ஒப்பந்தம் கைச்சாத்து ,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுடன் கொழும்பில் விரிவானதும் பயனுள்ளதுமான பேச்சுகளில் ஈடுபட்டிருந்தேன்.

சில மாதங்களுக்கு முன்னர், ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் தனது முதலாவது வெளிநாட்டு பயணத்துக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் இந்தியாவை தெரிவுசெய்திருந்தார்.

தற்போது, அவரது பதவிக்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமை என்னை சார்ந்துள்ளது.

இந்திய இலங்கை உறவுகளுக்காகவும் நமது இரு நாடுகளிடையிலும் காணப்படும் பிரிக்க முடியாத பிணைப்புக்காகவும் அவர் கொண்டிருக்கும் தனிப்பட்ட உறுதிப்பாட்டினை இது பிரதிபலிக்கின்றது.