மூன்று பேருந்துகள் மோதிக்கொண்டதில் குறைந்தது 29 பேர் காயமடைந்துள்ளனர்
இமதுவையில் மூன்று பேருந்துகள் மோதிக்கொண்டதில் குறைந்தது 29 பேர் காயமடைந்துள்ளனர்
காலி, இமதுவ அங்குலுகஹா சந்தியில் மூன்று பேருந்துகள் மோதியதில் குறைந்தது 29 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (26) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இரண்டு தனியார் பேருந்துகளும் ஒரு அலுவலகப் போக்குவரத்து பேருந்தும் மோதியுள்ளது.
ஒரு பஸ் நிலைதடுமாறி இருந்தபோது விபத்து ஏற்பட்டதாகவும், மற்றொன்று பின்னால் இருந்து மோதியதாகவும், அதைத் தொடர்ந்து மூன்றாவது பஸ் இரண்டாவது பஸ்ஸில் மோதியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
23 பயணிகள் இமதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஆறு பேர் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இமதுவ பகுதியில் மூன்று பேருந்துகள் மோதிக் கொண்டதில் குறைந்தது 29 பேர் காயமடைந்துள்ளமை தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காலி, இமதுவ அங்குலுகஹா சந்தியில் மூன்று பேருந்துகள் மோதியதில் குறைந்தது 29 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (26) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இரண்டு தனியார் பேருந்துகளும் ஒரு அலுவலகப் போக்குவரத்து பேருந்தும் மோதியுள்ளது.
ஒரு பஸ் நிலைதடுமாறி இருந்தபோது விபத்து ஏற்பட்டதாகவும், மற்றொன்று பின்னால் இருந்து மோதியதாகவும், அதைத் தொடர்ந்து மூன்றாவது பஸ் இரண்டாவது பஸ்ஸில் மோதியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
23 பயணிகள் இமதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஆறு பேர் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.












