மாகாண தேசியப் பாடசாலைகளில் 36178 ஆசிரியர் காலியிடங்கள்
மாகாண தேசியப் பாடசாலைகளில் 36178 ஆசிரியர் காலியிடங்கள் ,இலங்கையில் மாகாண மற்றும் தேசியப் பாடசாலைகளில் தற்போது 36,178
ஆசிரியர் காலியிடங்கள் இருப்பதாக கல்வி அமைச்சர்
ஆசிரியர் காலியிடங்கள் இருப்பதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார், இதில் தேசியப் பாடசாலைகளில் 1,501 காலியிடங்களும் அடங்கும்.
மாகாணப் பாடசாலை காலியிடங்கள் பின்வருமாறு விநியோகிக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்: மேல் மாகாணம்
– 4,630, தெற்கு – 2,513, மத்திய – 6,318, வடமேற்கு – 2,990, ஊவா – 2,780, வடமத்திய – 1,568, கிழக்கு – 6,613, சபரகமுவ – 3,994, மற்றும் வடக்கு மாகாணம் – 3,271.
ஆசிரியர் சேவையின் தரம் III (A) ஐச் சேர்ந்த, இன்னும் கடமைகளைப் பொறுப்பேற்காத 353 பட்டதாரிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் பிரதமர் அறிவித்தார்.
இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, பிரதமரின் செயலாளர் தலைமையில் நிறுவப்பட்ட ஆட்சேர்ப்பு மறுஆய்வுக் குழுவிடம் கோரிக்கைகள்
காலியிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கை
சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், காலியிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
நேற்று (21) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.










