பெண்ணின் நிர்வாண படத்துடன் முகநூல் பயன்படுத்தியவருக்கு சிறை
ஒரு பெண்ணின் புகைப்படத்தை போலியாக நிர்வாணப்படுத்தி போலியான முகநூலை திறந்து பதிவிட்ட நபர் ஒருவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா தீர்ப்பளித்தார்.
நேற்று (07) அக்கரைப்பற்று நீதிமன்றில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு எதிராக இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
பெண்ணின் நிர்வாண படத்துடன் முகநூல் பயன்படுத்தியவருக்கு சிறை
குறித்த நபர் வெளிநாடொன்றில் இருந்தபோது பெண்ணொருவரின் புகைப்படத்தை நிர்வாணப்படுத்தி முகநூலில் பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாட்டினை கையளித்திருந்தார்.
இந்த நிலையில் சம்மந்தப்பட்ட நபர் வெளிநாட்டில் இருந்து வருகைதந்தபோது விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி அந்நபர் குற்றவாளியாக ஆதாரபூர்வமாக மன்று உறுதிப்படுத்திய நிலையில் நீதவான் இவ்வாறு தீர்ப்பளித்தார்
- மரம் விழுந்து விபத்தில் பள்ளி மாணவன் இரு பெண்கள் பலி
- எரிபொருள் விலை நெருக்கடி
- விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் டிக்டாக் காணொளிகள் தொடர்பாக இளைஞர் கைது
- புனரமைப்புப் பணிகளுக்காக நவம்மஹாரா ரயில்வே கிராசிங் மூடப்படுகிறது
- ஐந்து வயது சிறுவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்பு
- இலங்கையைப் புனரமைக்கும் நிதி முடங்கிக் கிடக்கிறது
- சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவு பெற்ற கொள்கைகளால் விவசாயத் துறை சரிவைச் சந்திக்கும் அபாயம்: விவசாயிகள் சங்கம்
- எல்லாவில் 98 ஏக்கர்ஸ் ரிசார்ட் 5.1 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு
- 25 மில்லியன் அமெரிக்க டாலர் திறைசேரி மோசடி விசாரணை
- கட்டாய உழைப்பு வரி விதிப்பு
- கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil





















