
நீ வேண்டும் எனக்கு
எழுத படிக்க
தெரியா எனக்கு
எழுதி கொடுத்தாய்
காதல் கடிதம்
படித்து முடிப்பதற்குள்
பட்டம் பெற்று விட்டேன்
உன்னால் தானே முடிந்தது
உனக்கு நன்றி
நெஞ்சோரம் ஆலயமாய்
நீ தானே உறைந்தாய்
கண் வடிந்த கண்ணீரை
கண்ணே நீதானே துடைத்தாய்
உன்னை தொழுதே
உயிராய் எழுகிறேன்
நீ வேண்டும் எனக்கு
நீ தானே என் வாழ்வு ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 08-01-2024