நாய்களை தடுக்க விரித்த வலையில் சிக்கிய மகன்
நாய்களை தடுக்க விரித்த வலையில் சிக்கிய மகன் ,வீட்டுக்குள் நாய்கள் நுழைவதைத் தடுக்க, சட்டவிரோதமாக தந்தை பொருத்தியிருந்த மின்சார வயரில் மகன் மாட்டிக் கொண்டதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக, செவனகல பொலிஸார் தெரிவித்தனர்.
நெலும்வெவ – சமகிபுர பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது தாயார் தனியாக இருந்தபோது, அவருக்கு உணவு வழங்குவதற்காக அவரது வீட்டுக்கு சென்றபோதே, மின்சாரம் தாக்கி குறித்த நபர் உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்






