தடம் புரண்ட பிரதான ரயில்
தடம் புரண்ட பிரதான ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து நானு ஓயா நோக்கி பயணித்த டிகிரி ரயில் பயணிகள் வடகொட்ட நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
117 வது மைல் கம்பத்துக்கு அருகில் உள்ள பாலத்து தடம் புரண்டது என நாவலப் பட்டிய கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இவ்விதமான தொடரூந்துகள் தொடராக விபத்தில் சம்பவித்து வருகின்றது .
இவ்வாறன சம்பவம் பெரும் சந்தேகங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது .
இந்த ரயில்களின் தண்டவாளங்களில் விரிசல்
பயணிக்கும் இந்த ரயில்களின் தண்டவாளங்களில் விரிசல் எவ்வாறு ஏற்படுகிறது ஏன் இந்த விபத்துக்கள் ஏற்படுகின்றது என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டுள்ளது.
பேருந்து விபத்துகளும் தொடருந்து விபத்துகளும் விபத்துகளும் பின்புலத்தில் அரசியல் இருக்கக் கூடுமோ என்கின்ற கேள்விகள் வினாக்களாக எழுந்துள்ளது .
இதற்குரிய காரணத்தை அறிய வேண்டியது மக்களுடைய கடமையாக இருக்கின்றது .
வீதி விதிமுறைகள்
இலங்கையில் பல்வேறுபட்ட வீதி விதிமுறைகள் நடைமுறை சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பேருந்து விபத்துகளும் தொடர்ந்து ரயில் விபத்துகளும் அதிகமாக காணப்படுவது ஏன் என்கின்ற கேள்வியை இப்பொழுது எழுப்பி இருக்கின்றது.
தமது அரசியல் நிலங்களுக்காக மக்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது பலியாக்கிக் கொள்ளலாம் என்பதற்காக அரசியல் கட்சிகள் துடிப்பதாகவே காணப்படுகிறது .
தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்வதற்காக இவ்வாறான விபத்துக்களை ஏற்படுத்தி அதன் ஊடாக தம்மை பலப்படுத்திக் கொள்வதற்கு அவர்கள் முனைவதாக தெரிய வருகின்றது.











