சிறையுடைத்து 1534 கைதிகள் ஓட்டம்

சிறையுடைத்து 1534 கைதிகள் ஓட்டம்
Spread the love

சிறையுடைத்து 1534 கைதிகள் ஓட்டம்

சிறையுடைத்து 1534 கைதிகள் ஓட்டம், மொசாம்பிக் நாட்டில் கிறிஸ்துமஸ் நஸ்தார் தினத்தில் சிறை உடைத்து 1534 கைதிகள் தப்பி ஓடி உள்ளதாக அந்த நாட்டில் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர் .

இவ்வாறு தப்பி ஓடியவர்கள் 100பேர் மீளவும் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறை உடைப்பு நடவடிக்கையில் குறைந்தது 33 பேர் பலியாகியும் 16க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நன்கு திட்டமிட்ட ஒருங்கிணைப்பின் கீழ் இந்த சிறை உடைப்பு நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த சிறை உடைப்பு சம்பவத்தில் பின்னணியில் ஈடுபட்டது யார் இதன் பின்னணியில் அரசியல் கலப்பு இருக்கிறதா,அரசியல் ஆதரவு இருக்கிறதா என்பது தொடர்பில் மொசாம்பிக் உளவுத்துறை மற்றும் போலீசார் தீவிர விசாரணைகளை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

அந்த நாட்டில் பெரும் பரபரப்பையும் கலவரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது .

வீடியோ

வீதிகளை டயர்களை போட்டு எரித்து இந்த சிறை உடைப்பு நடவடிக்கை மேற்கொண்டு அங்கிருந்து 1534 சிறை கைதிகள் தப்பி ஓடி உள்ள சம்பவம் அதில் 100 பேர் மேல ஒரு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் உலகளாவிய ரீதியில் இதை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

சிறையை உடைத்து இவ்வாறு எப்படி கைதிகளால் தப்பியோட முடிந்தது என்ற கேள்விதான் உலக ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக இன்று மாற்றம் பெற்றுள்ளது .

இது எதிரிகளின் நீண்ட திட்ட மிடப்பட்ட சதியா என்பது தான் கேள்வியாகும்.