எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் கசிவு
எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் கசிவு ,இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கொலன்னாவ முனையத்தில் எரிபொருள் குழாய் வெடித்ததன் காரணமாக தற்போது பல இடங்களில் எரிபொருள் கசிந்து வருகின்றது.
கொழும்பு துறைமுகத்திலிருந்து எரிபொருளை ஏற்றிச் செல்லும் புகையிரத பாதைக்கு அருகில் அமைந்துள்ள குழாயொன்று இவ்வாறு சேதமடைந்துள்ளதுடன், இது JET A1 விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளை ஏற்றிச் செல்லும் குழாய் என்பது தெரியவந்துள்ளது.
கொலன்னாவ அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த குழாய் மீதொட்டமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழாயை அண்மித்த பகுதிகளில் 33,000 வோட் உயர் மின்னழுத்த மின் இணைப்பு அமைப்பு மற்றும் வீடுகள் அமைந்துள்ளன.
தற்போது பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் பவுசர் மூலம் கசியும் எரிபொருள் அகற்றப்பட்டு வருகின்றது.
இதற்கிடையில், குழாயை சீரமைக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி

- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்

- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்

- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்







