இரண்டு காவல்துறையினர் கைது
இரண்டு காவல்துறையினர் கைது, இலங்கை சிலாபம் பகுதியில் திடீர் சுற்றி வளைப்பு .
இந்த சுற்றைவளைப்பு நடவடிக்கையில் சந்தேக நபரை சிறைபிடித்து தடுத்து வைத்த நிலையில் அவர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலை தற்பொழுது இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் .
போதைவஸ்து நடவடிக்கையில் ஈடுபடுவதாக தகவல் கிடைக்க பெட்ரா நிலையில் காவல்துறையினர் சுற்றிவழிக்கப்பட்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர் .
தீவிர விசாரணை
அவ்வாறான நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றதன் பின்புலத்தில் இந்த காவல்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து தற்பொழுது அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களது இந்த கைது நடவடிக்கை தற்பொழுது இலங்கை காவல்துறை மக்கள் மத்தியிலும் ஒருவித அச்சத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது .
லஞ்சத்தை கொடுத்து அதன் ஊடாக இவர்கள் தப்பி சென்ற தானா குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே தற்போது இந்த போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காவல்துறையை தாக்கிவிட்டு ஆயுதங்களை பறித்து ஓட்டம்
இவ்வாறு கைது செய்யப்படும் குற்றவாளிகள் காவல்துறையை தாக்கிவிட்டு ஆயுதங்களை பறித்து கொண்டு தப்பியோடியான கட்டுக்கதைகள் அல்லது அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதாக காவல்துறையால் தெரிவிக்க பட்டு வருகிறது .
இவ்வாறான நிலையில் தற்போது இந்த போலீசார் கைது செய்யப்பட்டுள்ளது மேற்படி விடயங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கை ஒன்றாகவே காணப்படுகின்றது.
இலங்கையில் அதிகளவாக போதவஸ்து பாவனை அதிகரித்துச் செல்லப்படுகின்றது .
இந்த போதை வஸ்து விற்பனையின் பின்னால் இலங்கையில் ,அரசியல் புள்ளிகள் காணப்படுவதான குற்றச்சாட்டு ,மக்களினால் முன் வைக்கப்பட்டு வருகின்றமை தெரிந்ததே .
- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்

- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது







