
அழும் நீதி
உளம் உடைந்து நோகிறான்
ஊருக்காக வாழ்கிறான்
எவன் உணர்ந்து கொள்கிறான்
ஏனோ இவன் ஏற்க மறுக்கிறான்
கரை முட்டி அலையும்
களைத்து நோகிறது
எழுந்தேற முடியாது
ஏனோ தட்டி தவிக்கிறது
வேகம் தரும் காற்று
வேகம் மாறி வீசிட
தோற்று போனதாய்
தொலைவில் இருந்து அழுகிறது
வேர்த்து போன உடலுடன்
வேங்கை இன்று தூங்கிறது
வேலை வரும் இலக்கிற்காய்
வேடன் அழிக்க பதுங்கிறது …
காலம் ஒரு நாள் – உன்
கால் தடம் தழுவும் – அன்று
கண்ணீரால் கண்கள் நனையும்
கரிகாலன் தேசம் உன்னை பேசும் ….
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-09-2024
- ஒரு நாள் வெல்வேன்
- மரண மௌனம்
- என்னை மறந்துவிடு
- ஏனோ இந்த பிரிவு
- திருமணநாள் நல்வாழ்த்துகள்
- கண்ணாமூச்சியா காதல்
- என்னவனே 2
- அச்சம் ஏனோ
- எப்படி நான் பேசிடுவேன்
- காதல் பிரிவு
- நீ நான்
- என்னவனே 1
- என்னை விடு
- என் செல்ல நாய்க்குட்டியே
- பித்து எனக்குப் பிடித்து
- நேரில் வந்து விடு
- என் உயிரே நான் வெல்வேன்
- என்னை ஏற்று விடு
- என்னை அழைப்பாயா
- அடைத்து வைக்க வாவேண்டி