அடிப்படை உட்கட்டுமான வசதிகள் அற்ற நிலையில் குடிநீர் வசதி
அடிப்படை உட்கட்டுமான வசதிகள் அற்ற நிலையில் இயங்கிவரும் கிளி/மலையாளபுரம் திருவள்ளுவர் ஆரம்பப் பாடசாலையில் புதிதாக
அமைக்கப்பட்ட குடிநீர்க் கிணறும் அதனுடன் இணைந்த குடிநீர் வழங்கல் கட்டமைப்பும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் மாணவர்களின் பயன்பாட்டுக்கு திங்கட்கிழமை (23) கையளிக்கப்பட்டுள்ளது.
இப்பாடசாலையில் நீண்டகாலமாக நிலவிவந்த குடிநீர்த்தேவையை நிவர்த்திசெய்யும் நோக்கில், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கோரிக்கைக்கு அமைவாக, நியூசிலாந்தில் வசிக்கும் அரியதாஸ் செல்வதாஸ்
அடிப்படை உட்கட்டுமான வசதிகள் அற்ற நிலையில் குடிநீர் வசதி
எனும் நன்கொடையாளரின் நிதிப்பங்களிப்பில், அவரது தாயாரான அமரர்.மேரிரெஜினா அரியதாஸ் ஞாபகார்த்தமாக இக் குடிநீர்க்கிணறு அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட சிறீதரன் எம்.பியிடம், பாடசாலை அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, ஒலிபெருக்கி வசதியையும்,
சுற்று வேலி அமைக்கும் பணிகளையும் காலக்கிரமத்தில் மேற்கொள்வதாக எம்.பி உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்
- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி
- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61
- இந்த பிக்கு இப்படி சொல்கிறார்
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 64 அரிய வகை புறாக்களுடன் இரண்டு இலங்கை பயணிகள் கைது
- இரண்டு பெண்களைக் காயப்படுத்திய பிரதம ஆய்வாளர் கைது
- ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் 1000-க்கும் மேற்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் உரிமை கோரப்படாமல் உள்ளன
- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது
- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது
















