சீனா கப்பல் கடலில் மூழ்கியது 24 பேர் மரணம்
தென் சீனா கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த சீனா கப்பல் ஒன்று உடைந்து மூழ்கியது .
இதன் போது அந்த கப்பலில் பயணித்த மாலுமிகளில் இருபத்தி நான்கு பேர் மரணித்துள்ளனர்.
கொங்கொங்கில் இருந்து 186 மைல் தொலைவில் பயணித்து கொண்டிருந்த சீனா கப்பலே இவ்வாறு உடைந்து மூழ்கியது.
கப்பல் முழ்கும் செய்தி அறிந்து உலங்குவானூர்திகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர் .எனினும் அதற்குள் இந்த மாலுமிகள் பலியாகியுள்ளனர் .
மேலும் சிலர் காப்பாற்ற பட்டுள்ளனர் .குறித்த சீனா கப்பல் உடைந்து மூழ்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
அதிக புயலில் சிக்கியதால் இந்த கப்பல் புயலினால் உடைக்க பட்டு மூழ்கியதாக முதல்கட்ட விசாரணைகளில் தெரிவிக்க பட்டுள்ளது.