உக்கிரேன் புதைத்த 53 ஆயிரம் பொறி வெடிகளை அழித்த ரசியா இராணுவம்
உக்கிரேன் டொன்பஸ் பகுதியை ரசியா இராணுவம் நெருங்கி வருகிறது என்பதை அறிந்த உக்கிரேன் இராணுவம் அதன் பகுதி எங்கும் கண்ணிவெடிகளை புதைத்து வைத்து தப்பி சென்றன .
இதனை அறிந்த ரசியா இராணுவத்தின் குண்டு செயல் இழக்கும் படைப்பிரிவினர் சுமார் ஐம்பத்தி மூவாயிரம் கண்ணிவெடிகள் அடங்கிய பொறிவெடிகள் ,மிதிவெடிகள் மற்றும் கட்டடங்கள் மரங்களில் பொருத்தி வைக்க பட்ட குண்டுகளை செயல் இழக்க வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
காடுகளுக்குள் உள்ளாக நுழைந்த ரசியா படைகளிற்கு மரங்களில் இலைகளை போன்று குண்டுகளை மறைத்து வைத்து உக்கிரேன் படைகள் தாக்குதலை நடத்தின.
இந்த கண்ணிவெடிகள் இராணுவம் முன்னேறி சென்ற பின்னர் ,பின்னால் வெடித்து சிதறும் வண்ணம் வடிவமைக்க பட்டுள்ளன .
உக்கிரேன் புதைத்த 53 ஆயிரம் பொறி வெடிகளை அழித்த ரசியா இராணுவம்
இதனாலேயே ரசியா இராணுவத்திற்கு உக்கிரேன் களமுனையில் பெரும் சேதங்கள் ஏற்பட்டன.
உக்கிரேன் இராணுவத்தின் இந்த கண்ணிவெடி தாக்குதலை அறிந்து கொண்ட ரசியா இராணுவம் அவற்றை முன்னரே தாக்கி அழிக்கும் குண்டுகளை ஏவி பின்னர் தமது இராணுவத்தை முன்னேற அனுமதித்து தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.
இதனால் என்னவோ உக்கிரேன் இராணுவம் நாள் ஒன்றுக்கு ஆறாயிரம் எறிகணைகளை ரசியா இராணுவம் மீது வீசிய வண்ணம் உள்ளது
எனினு போர் ஒயாது தொடர்ந்த வண்ணம் உள்ளது .