இந்தியாவில் 23 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,963 பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 834 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24
மணி நேரத்தில் புதிதாக 60,963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 22,68,675-ல் இருந்து 23,29,638 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 56,110 குணமடைந்துள்ளதால் இதுவரை 16,39,599 பேர் குணமடைந்துள்ளனர். இது 70.38 சதவீதமாகும். 834
பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 46,091 ஆக உயர்ந்துள்ளது. இது 1.98 சதவீதமாகும்.
தற்போது 6,43,948 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது 27.64 சதவீதமாகும். நேற்று மட்டும் 7,33,449 பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டதாகவும், இதுவரை 2,60,15,297 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
- செங்கடலில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்
- பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை
- தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்
- காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை
- கிளிநொச்சியிலும் மனித எச்சங்கள் மீட்பு
- சீமானுக்கு ஒட்டு போடுங்கள் வெள்ளைக்காரி
- தனது சகோதரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன்
- ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி
- இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்
- ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி
- காசாவில் மக்கள் படுகொலை
- இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம்