களுத்துறை, கொழும்பில் மேலும் சில பொலிஸ் பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு
மேலும் சில பொலிஸ் பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல்
ஊரடங்குச் சட்டம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தெமட்டகொட, மருதானை பொலிஸ் பிரதேசங்களுக்கு மறு அறிவித்தல்
வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக
கொவிட்-19 வைரஸைத் தடுக்கும் மத்திய நிலையம் தெரிவித்திருக்கின்றது.
இதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் பயாகல, பேருவல, அளுத்கம
ஆகிய பிரதேசங்களுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுற்படுத்தப்பட்டுள்ளது.