காத்திரு

Spread the love

காத்திரு …..!

தேடி வந்த வேளையிலே
தேவையில்லை என்றெரிந்தாய் ..
பாதி மனம் நான் உடைந்து –
பாதியில சாகவில்லை …

தேடுதலை நான் விரித்து
தேவைகளை கூட்டி வைத்தேன் —
ஏறி வந்த எண்ணங்களோ –
ஏற்றி வைத்த ஏணி இன்று …

கூட வந்தார் ஏறி நின்று
கூடி கூடி நகைத்து நின்றார் …
வேதனைகள் தந்து விடும்
வேலிகளை போட்டு நின்றார் ….

வாங்கி வந்த அவமானம் –
வழிகளை செய்து விட —
ஏறி விட்டேன் நேற்று நானும் –
ஏறி வரும் செய்தி கேளு ….

பணம் வைத்து நீ அளக்கும் –
பாசமது எனக்கேனோ …?
நாளை ஒரு வேளையது -உன்
நக்கலது நாவறுக்கும் ……!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -12/01/2019

Leave a Reply