உன்னை தேடுதே உள்ளம் …!

Spread the love

உன்னை தேடுதே உள்ளம் …!

பொங்கு கடலென தங்கு தடையின்றி
எங்கும் அலைந்தவன் – பகை
தங்கு தடையின்றி வந்த வழிகளை
நெஞ்சு நேர் நின்று அறைந்தவன் …..

கொன்று பகை உடல் தாங்கியே – வந்து
வெற்றி சொன்னவன் -பகை
தாங்கியே வந்த கனரகம் அள்ளியே
ஆடி மகிழ்ந்தவன் …

லீமா என்றால் களமும் அதிரும்
இலைகள் கூட எழுந்து தாக்கும் ….
புல்லு கூட புலியாகி மிரட்டும்
புன்னகை சிந்தி போர் களம் ஆடும் …

குண்டு கூட கொல்ல அஞ்சி
ஓடி திரிந்தவன் – இன்று
கொடிய நோய் தாக்கி
வீழ்ந்து மடிந்தவன் ……

அண்ணன் அழைக்கும் வீர தளபதி – பகை
அஞ்சி நடுங்கும் மூத்த தளபதி …
பால்றாஜ் அண்ணா நீயும் வீழ்ந்தாய்
பாதியிலே ஈழம் இழந்தாச்சு …….!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -26/03/2019

Home » Welcome to ethiri .com » உன்னை தேடுதே உள்ளம் …!

Leave a Reply