![சம்பந்தன் விடை பெற்றார்](https://www.ethiri.com/wp-content/uploads/2024/07/poem-620x310.png)
சம்பந்தன் விடை பெற்றார்
தேசத்தின் விடுதலைக்காய்
தெருவிறங்கி வந்தவராம் – எம்
தேசிய தலைவனையும்
தெருவெறிந்து போனவராம்
கூட்டமைப்பின் தலைவராய்
கூடு கட்டி வைத்தவரை
நாயிடை கேவலமாய்
நாவாட்டி நின்றவராம்
தேசத்தின் தலைமகனை
தெருவெறிந்து போனவனை
மனமிருத்தி பாடவோ – நீ
மா மனிதன் ஆனவானோ
குள்ளநரி காடையரின்
குழு தலைவனானவனே
பின்னாளில் தமிழ் அழிவின்
பிள்ளை கறி மணந்தவனே
அண்ணனவன் சொன்னதற்காய்
அன்னை தமிழ் ஏற்றதுவே
உந்தன் புத்தி மாறாது
உமிழ்ந்து திரிந்தவனே
இன்று இறந்து போனவனே
இறுதியிலே என் கண்டாய்
ஆனாலும் இரங்குகிறோம்
ஆழ்ந்த இரங்கல் உந்தனுக்கு ..!
ஆக்கம் 01-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )
கவிதை #kavithai #kavithaigal #கவிதைகள்
மூத்த அரசியல் தலைவர் ,சம்பந்தன் 30-06-2024 விடை பெற்றார் ,அவருக்கு என் இரங்கல் பா
- உயிராயுதம்
- யார் நீ
- முன்னாள் போராளிகள் அவலம்
- உன்னால் தவிக்கிறேன்
- அவளை தேடுகிறேன்
- சம்பந்தன் விடை பெற்றார்
- ஏன் துரோகம் செய்தாய்
- என்னை எரிக்காதே
- வந்து விடு
- படிக்க துடிக்கும் புத்தகம் நீ
- மங்கைகள் களம் புகுந்தது
- பதில் சொல்
- என் செய்வேன்
- முட்டை கண்ணு பார்வை
- நெஞ்சை பிளந்து உன்னை தேடி
- உன்னை பார்க்கையில
- எமக்கும் ஒரு காலம் வாரும்
- பெண்ணால் உறவில் யுத்தமா
- எட்ட முடியா சிகரம் எட்டு
- இசைக்கு இன்று பிறந்த நாள்