குளத்தில் மூழ்கிய மாணவன்
இரணைமடு குளத்தில் மூழ்கிய மாணவன் ,கிளிநொச்சி இரணைமடு நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து , குளத்தில் நீராட சென்ற இந்த மாணவனே திடீரென நீரில் மூழ்கி காணாமல் போய் உள்ளார் .
அவ்வாறு காணாமல் போனவரை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் கடற்படையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
சுழியோடிகள் உதவியுடன் காணாமல் போன அந்த மாணவனை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ,அவர்கள் களமிறங்கியிருக்கின்றனர் .
திருமுருகண்டி இந்து வித்யாலத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்று வரும் 14 வயதுடைய மாணவனை இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது சகோதரர் நண்பர்களுடன் நீராட சென்ற பொழுதும் அவர்கள் தப்பித்துக் கொண்டனர் , அதே வேளை நீரில் மூழ்கிய தனது சகோதரனை காப்பாற்ற முடியாமல் அவர்கள் தத்தளித்து வந்துள்ளனர் .
குளத்தில் இவ்வாறு நீரில் மூழ்கி பலர் பல ஆண்டுகளாக பலியாகி வருகின்றனர்.
அதனுடைய ஆபத்தினை உணராமல் நீராடா செல்லுகின்றவர்களை இவ்வாறு பலியாகி வருகின்றனர் .
அடித்து பாயும் வெள்ளத்தில் நீராட சென்றதன் விளைவு ,அந்த நீரிழிவுகள் அடித்துச் செல்லப்பட காரணமாக இருந்திருக்க கூடும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது .
காணாமல் போன மாணவனுடைய சடலத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில், உதவியுடன் தேடுதல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மகிழ்ச்சியில் இலங்கை 8பில்லியன் தள்ளுபடி
- முன்னாள் போராளி அடித்து கொலை
- எரிந்த கடை நடந்தது என்ன வெளியான தகவல்
- இலங்கை கட்டார் விமான சேவை அதிகரிப்பு
- தமிழ்பெண் பிரிட்டனில் எம்பியாக தெரிவு
- இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு
- வான் கரும்புலித் தாக்குதல்
- பதற்றம் கட்சி தலைமையகத்தில்
- சூறாவளியினால் 12 வீடுகள் சேதம்
- உணவகம் எரிந்தது நடந்தது என்ன