
கத்திகள் எழுகிறது …!
திண்ணையில உட்க்கார்ந்து
தீங்குரைக்கும் நெஞ்சுகளே
குஞ்சுகளை காணாது
குருவிகள் அலைகிறதாம்
பஞ்சு வெடிக்கின்ற
பங்குனி வெய்யிலில்
கஞ்சிக்கு வழியில்லா
கால்கள் நடக்கிறதாம்
இதயம் இருக்கென்று
இன்றமர்ந்து பேசும்
கோடிகளில் கொஞ்சத்தை
கொட்டி கொடுங்கள்
கேடில்லை தான்
கேட்பாரும் இல்லைத்தான்
நாட்டை தின்றுவிட்டு
நம் வயிற்றில் அடித்தீரே
கோடிகளில் கொஞ்சத்தை
கொட்டி கொடுங்கள்
பாவ சுமையில்
பாதி கழுவட்டும்
ஆளை கொன்று
அரியணை பிடித்தீர்
அம் மக்கள் விழித்தார்
ஆட்சி துறப்பீர்
கஞ்சா காடழிக்க
கத்திகள் எழுகிறது
நாடு சுத்தமிட
நல்புரட்சி வெடிக்கிறது …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 31-03-2022
- இவளுடன் வாழ விடு ..!
- தமிழன் அழிந்த நாள் ….!
- நினைவில் வைத்து கொள் …!
- இன்றே இறந்து விடு ….!
- ஒருநாள் அழுவாய் காத்திரு ..!
- இப்போ ஏன் அழுகிறாய் ..?
- ஆட்சி கவிழ்க்கும் ஆவிகள் …!
- இராவணன் வருகிறான் ஓடிவிடு ..!
- கத்திகள் எழுகிறது …!
- பெண் உலாவும் இரவு வரும் ..!
- பஞ்சம் வர ஆண்டவரே போய் வாங்க…!
- கண்ணீரில் கரைகின்ற வாழ்வு ….!
- இளமையில் கூடு வசந்தம் கொஞ்சும் ..!
- கைவிடப்பட்ட தேசத்தின் ஓலம் ..!
- இன்றைய பொழுதின் என் நிகழ்வு …!