
உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!
என்ன செய் தாயோ
என்னை ஏங்க வைத்தாயோ
என்னை ஏங்க வைத்தேனோ
என் இதயம் பறித்தாயோ
முன் பனியாய் பின்னிரவில்
முன்னே வாராயோ – நான்
முழு நிலவில் குளித்திட
முழு உலா வாராயோ
எதுகை மோனை எனதாகும் – என்
ஏக்கம் வாங்கு உனதாகும்
படித்து பாரு புதிராகும்
படைக்க முனை விழிப்பாகும்
சந்தம் இல்லா பாட்டுக்குள்ளே
சங்கதி இருக்காதே
அந்தி சாயும் வேளையிலே
ஆள் மனம் தூங்காதே
முத்தம் தரவா முன்னே வரவா
முழு நிலவே பதில் தர வா
நித்தம் வரவா நீளும் இரவா
நினைவில் வைத்திட வா
உன்னை எண்ணி தவிக்கிறேன்
உருகி மெழுகாய் அழுகிறேன்
வின் விட்டு வாராயோ
விழுந்து உடல் தழுவாயோ ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 03-01-2022
- பால்மா இன்றி இறந்த சிசு – கொதிப்பில் மக்கள்
- வாலிபனை அடித்து இழுத்து சென்ற கொடூரம்
- வீடுகளை எரிச்சிட்டாங்க – எம்பிக்கள் முறைப்பாடு
- 10 அமைச்சர்கள் புதிதாக பதவி ஏற்பு
- பளையில் வெடித்த குண்டு – சிறுமி காயம்
- வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் – 59 பேர் மரணம்
- கிழக்கு ஐரோப்பாவில் ஒரு லட்சம் இராணுவத்தை குவிக்கும் அமெரிக்கா
- இஸ்ரேல் மொஸாட் உளவாளி ஈரானால் கைது
- கஸ்மீரில் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் மரணம்
- லண்டன் லூசியம் பகுதியில் இளம் பெண்ணை காணவில்லை – தேடும் பொலிஸ்
- முன்னாள் TGTE சபாநாயர் நாகலிங்கம் பாலசந்திரனுக்கு டாக்ட்டர் பட்டம்
- தாய்க்கு பாட்டு பாடிய பேரறிவாளன் – வீடியோ
- தமிழ் நாட்டு உணவு கப்பல் – இலங்கை வந்தது
- தீ வைத்த பெண்ணைதேடும் பொலிஸ்
- கொழும்பு தொடர்மாடி மக்களுக்கு சமைத்த உணவு வழங்குங்கள்
- இலங்கையில் வன்முறையில் ஈடுபட்ட குற்ற சாட்டில் 1500 அப்பாவிகள் போலீசாரால் கைது