
உன் காதலை சொல்லிடு …!
நான் உலாவும் வீதியிலே
நாளை நீயும் உலவிடு
நானும் நொந்த நாளினையே
நகல் எடுத்து சென்றிடு
ஆள் உலாவும் வீதியிலே
அமைதியானால் ஏற்று விடு
அன்பு உலாவும் வீதியிலே
அமைதி ஆனாய் செத்திடு
வான் நிலவு வீதியிலே
வந்து விட்டால் பார்த்திடு
வந்து நின்ற செய்தியென்ன
வாசல் வந்து சொல்லிடு
ஏற்று விட்டால் என்னன்பே
ஏறி வந்து சொல்லிடு
என்னுறக்கம் தொலைத்த நாளை
எழுதி வைத்து சென்றிடு
உன்னுறக்கம் நீ தொலைத்தால்
உள்ளம் என்னை ஏற்றிடு
உன் உளமதில் யானமர்ந்தேன்
ஊர்ந்து வந்து கொஞ்சிடு …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 26-12-2021
- இவளுடன் வாழ விடு ..!
- தமிழன் அழிந்த நாள் ….!
- நினைவில் வைத்து கொள் …!
- இன்றே இறந்து விடு ….!
- ஒருநாள் அழுவாய் காத்திரு ..!
- இப்போ ஏன் அழுகிறாய் ..?
- ஆட்சி கவிழ்க்கும் ஆவிகள் …!
- இராவணன் வருகிறான் ஓடிவிடு ..!
- கத்திகள் எழுகிறது …!
- பெண் உலாவும் இரவு வரும் ..!
- பஞ்சம் வர ஆண்டவரே போய் வாங்க…!
- கண்ணீரில் கரைகின்ற வாழ்வு ….!
- இளமையில் கூடு வசந்தம் கொஞ்சும் ..!
- கைவிடப்பட்ட தேசத்தின் ஓலம் ..!
- இன்றைய பொழுதின் என் நிகழ்வு …!