
அழுகுரல் கேட்கிறதா?
அந்தி பொழுதில் நந்தி கடலில்
அழுகுரல் கேட்கிறதா?
அவல சாவின் ஆவிகளின்
ஆத்மா துடிக்கிறதா
ஓடிவந்தவர் கூடி நின்றவர்
ஒரு நொடி வீழ்ந்தனரே
ஓடி வந்த கந்தக கூண்டில்
ஓர் நூறாய் கிழிந்தனரே
பகைவர் விட்டு பாவிகள் கொன்றீர்
இது தான் படையெடுப்போ ..?
பகலும் இரவும் மாறி வரும்
பகைமை உணர்வீரா
ஒரு நொடி எங்கள் தமிழர் விழித்தல்
ஓடிடும் பகைமைகளே
ஒரு நாள் எங்கள் அவலம் தரிப்பீர்
ஓடி அழுவீரே
விதைத்தவன் வினையை
விரைவில் அறுப்பான்
விளைச்சல் இது தானே – இந்த
விபரம் தெரிவானே
எங்கள் மண்ணிலே எம்மை அழித்தவன்
எப்படி வாழ்ந்திடுவான்..?
ஏதடா மனிதா நீயெல்லாம் தமிழனா
எப்போ வெடித்திடுவாய்..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 10-10-2021
- இவளுடன் வாழ விடு ..!
- தமிழன் அழிந்த நாள் ….!
- நினைவில் வைத்து கொள் …!
- இன்றே இறந்து விடு ….!
- ஒருநாள் அழுவாய் காத்திரு ..!
- இப்போ ஏன் அழுகிறாய் ..?
- ஆட்சி கவிழ்க்கும் ஆவிகள் …!
- இராவணன் வருகிறான் ஓடிவிடு ..!
- கத்திகள் எழுகிறது …!
- பெண் உலாவும் இரவு வரும் ..!
- பஞ்சம் வர ஆண்டவரே போய் வாங்க…!
- கண்ணீரில் கரைகின்ற வாழ்வு ….!
- இளமையில் கூடு வசந்தம் கொஞ்சும் ..!
- கைவிடப்பட்ட தேசத்தின் ஓலம் ..!