
உண்மை சொல் ..!
மூச்சு முட்ட மூச்சு முட்ட
முன்னே வந்து நிற்கிறாய்
முத்தத்தாலே உன்னை தைக்க
முன்னே ஏனோ ஊந்துறாய் ..?
ஆலயத்தின் சாமிகளாய்
ஆடை இன்றி நிற்பதா ..?
இயற்கை தந்த பேரழகை
இயமனுக்கே விற்பதா ..?
ஆசைகளை தூண்டி விட்டு
அருகில் வந்து இரசிக்கிறாய்
அந்தரத்தில் தவிக்க விட்டு – ஏன்
ஆராத்தி எடுக்கிறாய் ..?
கலைந்து போன கூந்தலில்
கை வைத்து போனது யார்
கட்டி வைத்த பேரழகை
கடத்தி இன்று விற்றது யார் ..?
விற்பனைக்கு சந்தையில
விண்ணிலவை வைத்தது யார் ..?
விவரமாக சொல்லி விடு
விசாரணைக்கு வருகிறேன் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 05-10-2021
- இவளுடன் வாழ விடு ..!
- தமிழன் அழிந்த நாள் ….!
- நினைவில் வைத்து கொள் …!
- இன்றே இறந்து விடு ….!
- ஒருநாள் அழுவாய் காத்திரு ..!
- இப்போ ஏன் அழுகிறாய் ..?
- ஆட்சி கவிழ்க்கும் ஆவிகள் …!
- இராவணன் வருகிறான் ஓடிவிடு ..!
- கத்திகள் எழுகிறது …!
- பெண் உலாவும் இரவு வரும் ..!
- பஞ்சம் வர ஆண்டவரே போய் வாங்க…!
- கண்ணீரில் கரைகின்ற வாழ்வு ….!
- இளமையில் கூடு வசந்தம் கொஞ்சும் ..!
- கைவிடப்பட்ட தேசத்தின் ஓலம் ..!