
தமிழர் வாழ இவர்கள் வருவார்களா ..?
சோழ பரம்பரை ஆண்ட கடலினுள்
வேங்கை படை இல்லையா ?
கரிகாலன் ஆண்ட பூமியில்
காக்கை வன்னியரா
கொல்லி வைத்தவன் குடிமனை புகுந்து
கொள்கை சொல்லிடவோ
அள்ளி வைத்தவர் ஆக்கினை புரிந்தவர்
அரியணை ஆண்டிடவோ
செந்தமிழ் பாடியே ஆடிய புலவர்
செம்மண் மிதிபடவோ
வந்தேறி ஆரியர் வழங்களை சுரண்டி – தமிழ்
வம்சம் அழிப்பதுவோ
கந்தக தீயில் வெந்திட இலங்கா
கலகம் பிறந்திடுமா
கொன்றவன் வாயிலில் கொலைகள் வீழ்ந்திட
கொடும் பகை தகர்ந்திடுமா
வான் படை காவியே வானில் ஏறிய
வரி புலி வந்திடுமா ?
வரும் தளிர் செழித்திட மொழியும் விழித்திட
வாயில் வந்திடுமா ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 24-09-2021
- இவளுடன் வாழ விடு ..!
- தமிழன் அழிந்த நாள் ….!
- நினைவில் வைத்து கொள் …!
- இன்றே இறந்து விடு ….!
- ஒருநாள் அழுவாய் காத்திரு ..!
- இப்போ ஏன் அழுகிறாய் ..?
- ஆட்சி கவிழ்க்கும் ஆவிகள் …!
- இராவணன் வருகிறான் ஓடிவிடு ..!
- கத்திகள் எழுகிறது …!
- பெண் உலாவும் இரவு வரும் ..!
- பஞ்சம் வர ஆண்டவரே போய் வாங்க…!
- கண்ணீரில் கரைகின்ற வாழ்வு ….!
- இளமையில் கூடு வசந்தம் கொஞ்சும் ..!
- கைவிடப்பட்ட தேசத்தின் ஓலம் ..!