![15பேர் காயம் பேரூந்து மோதி](https://www.ethiri.com/wp-content/uploads/2024/07/BUSSS.jpg)
15பேர் காயம் பேரூந்து மோதி
15பேர் காயம் பேரூந்து மோதி ,வெவல்தெனிய பிரதேசத்தில் இடம் பெற்ற விபத்திலேயே 15 மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த மக்கள் யாவரும் தற்பொழுது மீட்கப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற இந்த பேருந்து விபத்தினால் மக்கள் பெரும் அச்சத்துடன் பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பேருந்து விபத்து தொடர்பான விசாரணை ஆரம்பம்
இந்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
நாள்தோறும் வீதிகளில் இடம்பெறுகின்ற இவ்வாறான பேருந்து விபத்துகளினால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச நிலையில் காணப்படுகின்றது.
பேருந்து சாரதிகளுக்கு உரிய முறை பயிற்சி வழங்கப்படாமல் இந்த விபத்து ஏற்படுகிறதா என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்க மறுத்து தான்தோன்றித்தனமாக பேருந்துகளை செலுத்தி செல்வதாலேயே இந்த விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன .
நேரெதிர் மோதிய பேரூந்துகள்
இந்த பேருந்து ஒன்றுடன் ஒன்று பேருந்து மோதியதலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் முடிவிலேயே மேலதிக விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாள்தோறும் இலங்கையில் இடம்பெறுகின்ற இவ்வாறான பேருந்து விபத்துகளுக்கு காரணம் யார் ..?
சூத்திரதாரிகள் யார் என்பதையும் காரணம் என்ன என்பதையும் இதுவரை உரிய முறையில் விசாரணை நடத்துகின்ற போலீசார் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.