![ஹிருணிகாவுக்கு மூன்று வருட சிறை](https://www.ethiri.com/wp-content/uploads/2024/06/ஹிருணிகா-பிரேமச்சந்திர.jpg)
ஹிருணிகாவுக்கு மூன்று வருட சிறை
ஹிருணிகாவுக்கு மூன்று வருட சிறை ,இலங்கையில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் தற்பொழுது எதிர்க்கட்சிகளை பந்தாடும் நிலையில் ரணில் விக்ரமசிங்க ஆட்சி காணப்படுகின்றது.
அந்த வகையில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு மூன்று வருட தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மீது குற்றச்சாட்டப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து , இவருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மிகப்பெரும் செயலாற்றி வந்தவர் ஹிருணிகா பிரேமச்சந்திரா அவர், மக்கள் ஆதரவினை பெற்று அவர் மகத்தான சாதனையை பெற்று வந்தார்.
அரசியல்வாதிகளை மிரட்டும் ரணில் அரசு
அதன் அடிப்படையில் இதுவரை காலமும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் காத்திருந்த ரணில் அரசாங்கம், தேர்தல் வருகின்ற இந்த காலப்பகுதியில் அவருக்கு
எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு அவரை சிறையில் தள்ளி .உள்ளது
இன்று காருணிகா சிறைக்கு சென்றாலும் ,எமது அரசு வெற்றிபெறும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தமது அரசு ஆட்சியில் அமர்ந்தாள் , ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஹிருணிகா பிரேமச்சந்திர விடுதலை செய்யப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது .
தேர்தலை மையமாக வைத்து அரசியல் கட்சிகள் ஒன்றை ஒன்று பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதான விடயங்கள் இதன் ஊடாக மீளவும் அம்பலமாக உள்ளது .
ஐக்கிய தேசியக் கட்சியை எப்படியாவது இந்த தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று சாதனை படைத்துவிட வேண்டும் என்கின்ற நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமிசிங்கா கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார் .
அதனால் எதிர்கட்சிகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கையிலும், தனது நகர்வை மேற்கொண்டு வருவது இந்த சிறை அடைப்பு ஊடாக தெரிய வருகிறது.