வியாபாரிகள் 10 பேரை சுட்டு கொன்று தீவிரவாதிகள் வெறியாட்டம்

Spread the love

வியாபாரிகள் 10 பேரை சுட்டு கொன்று தீவிரவாதிகள் வெறியாட்டம்

இந்தோனேசியா பாப்புவா பகுதியில் ஆயுதங்களுடன் நுழைந்த இருபது தீவிரவாதிகள் அங்கிருந்த பத்து வியாபாரிகளை சுட்டு கொன்றனர்.

இவர்கள் கொலை வெறி தாக்குதலில் சிக்கி இருவர் படு காயமடைந்துள்ளனர் .

தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் நுழைந்து நடத்திய திடீர் தாக்குதல் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்க பட்ட பகுதியில் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது.


வியாபாரிகளை தீவிரவாதிகள் சுட்டு கொன்ற செயல் அந்த பகுதியில் வியாபாரம் நடத்தி வரும் வியாபாரிகள் பீதி நிலையில் உறைந்துள்ளனர்.

வியாபாரிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினால் அங்குள்ள கடைகள் முதல் யாவும் அடித்து பூட்ட பட்டு விடும்.


வியாபார நிலையங்கள் முற்றாக செயல் இழந்தால் மக்கள் பட்டினியால் இறக்கும் நிலை ஏற்படுவதுடன் அரசுக்கு
எதிராக போராட்டம் நடத்துவார்கள் என்பது தீவிரவாதிகள் திட்டமாக உள்ளது என கணிக்க பெறுகிறது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply