![பேருந்து கட்டணங்கள் குறைப்பு](https://www.ethiri.com/wp-content/uploads/2024/06/busss.jpg)
பேருந்து கட்டணங்கள் குறைப்பு
பேருந்து கட்டணங்கள் குறைப்பு ,இலங்கையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணங்களில் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதன்படி தற்பொழுது இரண்டு ரூபாய் குறைக்கப்பட உள்ள நிலையில் இதனுடைய கட்டண விலை 28 ரூபாவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணம், 28 ரூபாவாக நிலைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் இடம்பெறுகின்ற தேர்தலை அடுத்து, வரி குறைப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் ,மற்றும் மக்களுக்கு பாரிய அளவிலான நல்ல விடயங்களை வழங்குவதற்காக ரணில் அரசினால் அதிரடி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
திடீரென பேரூந்து கட்டணம் குறைப்பு
இலங்கையில் பேருந்து பயணிகள் பாவனை அதிகமாக காணப்படுவதால் ,பேருந்து கட்டணம் உயர்வடைந்ததை அடுத்து ,மக்கள் சொல்லென்னா துயரை சாதித்து வந்தனர் .
அதனை அடுத்து தேர்தல் வருகின்ற இந்த வேளையில் ,இரண்டு ரூபாவால் பேருந்து கட்டணம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இரண்டு ரூபாய் பேரூந்து கட்டன குறைப்பு என்பது திட்டமிடப்பட்ட தேர்தல் நாடகத்தை ,ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அரசு நடத்துவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
வீதி போக்குவரத்தில் பேருந்துகள்
இன்றைய இலங்கையில் தொடராக வீதி போக்குவரத்தில் பேருந்துகள் முன்னிலை வகித்து வருகின்ற பொழுதும் ,பேருந்துகளில் பயணம் செய்வதே இப்பொழுது இலங்கையில் பெரும் அபாயகரமான ஒன்றாக காணப்படுகின்றது .
நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற பேருந்து விபத்தினால் , பல்வேறுபட்ட மக்கள் காயம் அடைந்தும் பலியாகி வருகின்றனர் .
இவ்வாறான நிலையில் தற்போது ,பேருந்த கட்டண குறைப்பை அடுத்து ,மக்கள் அதிகளவாக ,பேருந்து பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் எதிர்வரும் காலங்களில் பேரூந்து விபத்துக்கள், மேலும் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது .
எதிர்வரும் காலங்களில் பேருந்துகளில் மக்கள் நிறைந்து வழியம் நிலையில் அரசு அதிக பேரூந்து வருமானத்தை பெற்று கொள்ள வாய்ப்பு உள்ளது .
மக்கள் பயணிகளாக அதிகம் செல்லக்கூடிய வாய்ப்பு ,இந்த் விலை குறைப்பினால் ஏற்பட்டதால் ஆச்சர்ய படுவதர்க்கு ஒன்றும் இல்லை எனலாம் .