![புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜேவிபி](https://www.ethiri.com/wp-content/uploads/2024/06/pillaiyan.jpg)
புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜேவிபி
புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜேவிபி ,தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஜேவிபி அமைப்பினர் ஆயுதங்களை வழங்கியதாக, புலிகள் முன்னாள் தளபதி பிள்ளையான் தெரிவித்துள்ளார் .
அனுராதா திசநாயக்காவின் கருத்துக்கு பதில் அளிக்கும் பொழுதே சிவநேசதுரை பிள்ளையான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதபற்ற குறையால் தள்ளாடிக் கொண்டிருந்த ஆரம்ப கால பகுதியில் , ஜேவிபி அமைப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெருந்தொகையில் ஆயுதங்களை வழங்கியதாக பிள்ளையான் தெரிவித்தார் .
அதனை அடுத்தே பாரிய வெற்றியை தாங்கள் பெற்றதாகவும் , பல்வேறுபட்ட தாக்குதலை சிங்கள இராணுவத்திற்கு எதிராக நடத்தியதாக, விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியாகவும் உறுப்பினராக விளங்கிய பிள்ளையான் தெரிவித்துள்ளார் .
தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆயுதம்
இன்றைய ஆளும் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக விளங்கி வரும் பிள்ளையான் ,தற்பொழுது தான் மட்டக்களப்பில் மக்களை மிரட்டி வருவதற்கான குற்றச்சாட்டை முற்று முழுதாக மறுத்து வருகிறார் .
![புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜேவிபி](https://www.ethiri.com/wp-content/uploads/2024/06/அனுராதா-திசநாயக்கா.jpg)
இவ்வாறு மிரட்டப்பட்டால், எனக்கு எவ்வாறு மக்கள் பெருந்தொகையில் வாக்குகளை அளிப்பார்கள் என, பிள்ளையான் கேள்வியை எழுப்பி இருக்கின்றார் .
தமிழில் விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவர்கள் வரிசையில் இன்று வரை பிள்ளையான் கருணா முதலிடம் வகிக்கின்றனர் .,
அவ்வாறான நிலையில் எதிர்வரும் தேர்தலில் பல கட்சிகள் போட்டியினை நடத்திட தயாராகி வருகின்ற நிலையிலும் ,ரணில் விக்கிரமசிங்காவை பிள்ளையார் சந்தித்த நிலையில் .
தற்பொழுது அனுராதிசநாயக்காவுக்கு எதிராக இந்த கருத்தை இராயங்க அமைச்சர் பிள்ளையான் வெளியிட்டுள்ளார் .
மட்டக்களப்பில் மக்களை மிரட்டி வருகிறார் பிள்ளையார் என்ற குற்றச்சாட்டை அனுரா திசாநாயக்க வெளியிட்டு இருந்தார் .
அதற்கு பதில் வழங்கும் முகமாகவே தற்பொழுது புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியது ஜேவிபி என்கின்ற விடயத்தினை தற்போது உலக அரங்கில் பிள்ளையான் அறிமுகப்படுத்தி வைத்திருக்கின்றார்.
பிள்ளையான் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கும் எனவே ஒட்டுமொத்த உலகத்தமிழர்களும் அப்படியே நம்புகிறார்கள் என்பதாகவும் மக்கள் இப்படியும் கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள் .
எதிர்வரும் தேர்தலில் பலத்த போட்டி தயாராகி வருகின்ற நிலையில் ,தற்பொழுது சூடு பறக்கும் தேர்தல் பரப்புரைகளும் ,கட்சிகள் மீது நடத்தப்படும் வன்ம தாக்குதல்களும் வெடித்து பறக்கின்றன .
- முன்னாள் போராளிகள் அவலம்
- புலிகள் பெயரை பயன்படுத்தி பணம் மோசடி
- தீயில் எரிந்த குடியிருப்பு
- பாணி பூரிக்கு தடை
- இலங்கையில் கடுமழை மக்களுக்கு எச்சரிக்கை
- சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய மஹிந்தா
- 134 பேர் சமயக்கூட்டத்தில் மரணம்
- இலங்கையில் நாள்தோறும் விபத்தில் 32 பேர் மரணம்
- 465 இலங்கை ராணுவத்தினர் ரஷ்யாவில்
- இலங்கையர் போதைவஸ்துடன் கைது