சாப்பாட்டில் பல்லி விற்றவர் கைது

சாப்பாட்டில் பல்லி விற்றவர் கைது
Spread the love

சாப்பாட்டில் பல்லி விற்றவர் கைது

சாப்பாட்டில் பல்லி விற்றவர் கைது ,யாழ்ப்பாணம் செல்வச் சன்னதி ஆலய சூழலில் கடையொன்றில் மிக்சருக்குள் பல்லி பொரித்து விற்க பட்டுள்ளது கண்டுபிடிக்க பட்டுள்ளது .

இறந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. இந்த பல்லியினை அவர் பொரித்து அதனை விற்பனை செய்துள்ளார் .

அதனை எடுத்து அந்த பொருளை கொள்முதல் செய்த வாடிக்கையாளர் செய்த முறைப்பாட்டை அடுத்து , குறித்து மிக்ஸர் கடை விற்பனையாளருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .

அதனை அடுத்து தற்போது அவருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் பல்லி விற்பனை

இந்த கடை வாடிக்கையாளர் வழங்கிய முறைபாட்டினை அடுத்து, சுகாதார பிரிவால் மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற வழக்கினை அடுத்து கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 15 ஆயிரம் ரூபாய் தண்டமும் வழங்க பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன .

இலங்கையில் பல்வேறுபட்ட கடைகள் மற்றும் வீதியோர கடைகள் என்பனவற்றில் இவ்வாறான சுகாதார சீர்கேடான முறையில் ,பொருட்கள் விற்பனை செய்வது ,மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது .

வீதியோர கடைகள் மற்றும் ,மிகப் பிரபலமான உணவகங்களில் கூட இவ்வாறான சுகாதாரமற்ற முறையில், மக்கள் உண்ண முடியாத அளவு அருவருப்பான ,வகையில் உணவு பண்டங்கள் விற்பனை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுகிறது .

செல்வச் சன்னதி ஆலயத்தில் உணவில் பல்லி

யாழ்ப்பாணம் செல்வச் சன்னதி ஆலயத்தில் இடம் பெற்ற, இந்த கடையொன்றில் , பல்லி பொரித்து விற்க பட்ட செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

குறித்த செய்தியானது சமூகவலைத்தளங்களில் வைரலானதை அடுத்து தற்போது இந்த விடயம் ,பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது.

சீனாவில் பல்லிக்கு ரொம்ப கிராக்கி காணப்படுகிறது .

இலங்கையில் சீனா அகல கால் ஊன்றிய நிலையில் இப்பொழுது பல்லியை பொரித்து து இப்படி விற்கிறார்களோ என்ற ஐயம் எழுந்துள்ளது .

இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாற்றம் பெற்று இருந்ததும் ,இது தொடர்பான பலவேறு பட்ட கருத்துக்கள் மக்கள் மத்தியில் ,பேச பட்டு வந்ததையும் இங்கே இவ்விடத்தில் நினைவு கூற தக்கது .