கொரோனா வைரஸ் மூளையை பாதிக்கும் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Spread the love

கொரோனா வைரஸ் மூளையை பாதிக்கும் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் மூளைக்குள்ளும் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும்

என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனா வைரஸ் மூளையை பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் உடலில் பல்வேறு உறுப்புகளை பாதிப்படைய செய்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

முதலில் நுரையீரலில் நுழையும் கொரோனா வைரஸ் இருமல், காய்ச்சல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இந்த அறிகுறிகளுக்கு

பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு உடல்நிலை மோசமான நிலைக்கு சென்று விடும்.

கொரோனா பற்றிய ஆய்வுகளில் அந்த வைரஸ் நுரையீரலை தவிர இதயம், நரம்பு மண்டலம் உள்ளிட்ட உறுப்புகளையும் பாதிப்படைய செய்கிறது என்பது தெரிய வந்தது.

மேலும் தலைவலி, குழப்பமான மனநிலை, வாந்தி போன்றவையும் கொரோனா

வைரசின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகளின் அடுத்தடுத்த ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் மூளையை பாதிக்கும் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தநிலையில் கொரோனா வைரஸ் மூளைக்குள்ளும் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதொடர்பாக அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஆய்வில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு தலைவலி, குழப்பம் மற்றும் மயக்கம் ஏற்படுகின்றன. இது

கொரோனா வைரஸ் மூளைக்கு நேரடியாக செல்வதன் விளைவாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நோய் எதிர்ப்பு நிபுணர் அகிகோ இவாசாகி தலைமையிலான ஆய்வறிக்கையில், “வைரஸ் மூளைக்குள் கொந்தளிக்க முடிகிறது

என்றும், மூளைக்கு அருகே ஆக்சிஜன் செல்களை பாதிக்கிறது என்றும்

தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் இதன் பாதிப்பு இன்னும் தெளிவாக தெரியவில்லை” என்று கூறப்பட்டு இருக்கிறது போதுமாம் இது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

இந்த ஆராயச்சி பூர்வாங்க கட்டத்தில்தான் இன்னும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சான்பிரான்சிஸ்கோவில் கலிபோர்னியா பல்கலைக்கழக நரம்பியல் துறை தலைவர் ஆண்ட்ரூ ஜோசப்சன் கூறும்போது,

“மூளையில் வைரஸ் நேரடி ஈடுபாடு உள்ளதா, இல்லையா என்பதை புரிந்து கொள்வது அசாதாரணமானது. ஆனாலும் அந்த

ஆய்வறிக்கை மதிப்பாய்வுக்கு வரும்வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.

Leave a Reply