எச்சரிக்கை ….!
சேனை படை கொண்டு
செந் தமிழ் நாட்டுக்குள்
வந்தவரை தமிழ் என்ன
வழி தொழவோ …?
முற் புதருக்குள்
முன் வர பயந்தவர்கள்
நெஞ்சிடித்து இன்றென்ன
நெருக்கும் உரசல் …?
கந்தக ஒலியில்
காட் சட்டை நனையும்
கோமாளிகள் இன்றென்ன
கோமகனோ …?
கோவண கயிற்றிலே
கொடி பிடிக்கும் தலைகளை
காப்பாற்ற முடியா
காலம் எழும்
குமுறும் ஏரி மலை
குன்று வெடிக்கும்
நஞ்சு கட்டியே
நாடு கொதிக்கும்
பஞ்சில் தீ
பற்றி பிடிக்கும்
கறுப்பு முகங்கள்
கருகி மிதக்கும்
உலக விதியில்
உழலும் பிழையில்
திருத்தி எழுத
திருப்பம் நடக்கும்
வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் 11-06-2020