இஸ்ரேல் அமைச்சரை சுத்தி வளைத்து தாக்கிய மக்கள்
இஸ்ரேல் அமைச்சரை சுத்தி வளைத்து தாக்கிய மக்கள் ,இஸ்ரேல் இனவாத அமைச்சர் ஒருவரை போராட்ட நடத்திக் கொண்டிருக்கின்ற மக்கள் முன்பாக காரில் பயணித்துக் கொண்டிருந்தார் .
அவரை வழிமறித்த போராட்ட நடத்திக் கொண்டிருந்த மக்கள் அவர் கார் மீது சரமாரி தாக்குதலை நடத்தினர்.
இதில் அமைச்சருக்கு காயங்கள் ஏதும் ஏற்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை.
காசா ,ரபா , தாக்குதல்
இஸ்ரேல் ராணுவம் காசா ,ரபா , தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரியும் சிறை பிடித்து செல்லப்பட்ட கைதிகளை மீட்டரும்படி கோரி இந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .
அவ்வாறு போராட்டம் நடத்துகின்ற மக்கள் மத்தியில் பயணித்த இவரது காரை சுற்றி வளைக்கப்பட்டு போராட்டக்காரர்கள் கோபம் கொண்டு தாக்கினர் .
இஸ்ரேலிய அமைச்சரவையில் இனவாத அமைச்சராகவும் ஆளுமையுள்ள அமைச்சராகவும் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஆதரவை பெற்று விளங்கக்கூடிய மிக முக்கியமான ஒருவராக செல்வாக்கு நிறைந்த ஒருவராக காணப்படும் அமைச்சர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மக்கள் இஸ்ரேல் அமைச்சர் ஒருவருக்கு எதிராக நடத்திய இந்த தாக்குதல் உலகளாவிய ரீதியில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது .
முடிவில்லாது தொடரும் இந்த போரினை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து எமது கைதிகளை விடுவித்து தரும்படியும், போரை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்தி கோருகின்றனர் .
விழுந்து போன எங்களது பொருளாதாரம் வியாபாரங்களை கட்டி எழுப்ப இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் .
பிரதமர் நெதன்யாகு கடும்போக்குத்தனம்
ஆனால் அந்த மக்களது கோரிக்கைகளை ஏற்க மறுத்து தமது அரசியல் அபிலாசைகளை தக்க வைத்துக் கொள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது கடும்போக்குத்தனத்தை காண்பித்து வருகின்றார் .
280க்கும் மேற்பட்ட நாள்கள் கடந்து பயணிக்கின்ற இந்த மக்கள் போராட்டத்திற்கு ஏதும் மதிப்போம் அளித்ததாக தெரியவில்லை.
தொடர்ந்தும் இவ்வாறான போராட்டங்கள் எடுத்துச் சென்றால் இஸ்ரேல் பிரதமர் வதிவிடங்கள் மற்றும் வீடுகள்,
என்பன சுற்றிவளைக்க வைக்கப்பட்டு மக்கள் உள் நுழைந்து தாக்குதல் நடத்தக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் ,சில செய்திகள் இப்படி தெரிவித்தனர்.