இலங்கையில் நாள்தோறும் விபத்தில் 32 பேர் மரணம்

இலங்கையில் நாள்தோறும் விபத்தில் 32 பேர் மரணம்
Spread the love

இலங்கையில் நாள்தோறும் விபத்தில் 32 பேர் மரணம்

இலங்கையில் நாள்தோறும் விபத்தில் 32 பேர் மரணம் ,இலங்கையில் நாள்தோறும் வீதி விபத்துகளில் 32 பேர் பலியாகி வருவதான புதிய தகவல்கள் திடுக்கிட வைத்துள்ளது .

புதிய சுகாதார அமைச்சினால் ல் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் அடுத்து இலங்கையில் நாள்தோறும் வீதி விபத்துக்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என்கின்ற சம்பவங்களில் ஊடாக 32 பேர் பலியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பல்வேறுபட்ட காயங்களுக்கு உள்ளாகும் இவர்கள் ,இவ்வாறு பலியாகி வருவதாக, அந்த சுகாதார அமைச்சின் புதிய குறிப்போடு தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் பன்னிரண்டாயிரம் மக்கள் இவ்வாறு இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒரு மில்லியன் மக்கள் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான காயங்களுக்கு உள்ளாகி வருபவர்கள் வீதி விபத்துக்கள் வெட்டு காயங்கள் மற்றும் வீடுகளில் ஏற்படுகின்ற காயங்கள் என பல்வேறுபட்ட காயங்களுக்கு உள்ளான நபர்களை இவ்வாறு சிகிச்சை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வருடம் ஒன்றுக்கு ஒரு மில்லியன் கிட்டத்தட்ட மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்து நிலையில் காணப்படுகிறது.

பல்வேறுபட்ட காயங்களுக்கு உள்ளாகி அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனற்று பலியாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் இடம்பெறுகின்ற வீதி விபத்துக்கள் தொடர்பாக மரணமாகி வருகின்றனர் .

அந்த காயமடைந்தவர்களும் இந்த புள்ளிவிவரத்துக்கு உள்ளடடக்கப்படுகின்றனர் .

ஒரு வருடத்தில் 12 ஆயிரம் மக்கள் பலியாகி வருகின்றார்கள்.

இந்த தகவல் தற்பொழுது இலங்கை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது .

மக்களுடைய அலட்சியின்மை மற்றும் அறியாமை காரணமாகவே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகி வருவதாக தகவலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது .

இலங்கையில் 12 ஆயிரம் மக்கள் பலியாகி வருகிறார்கள், மற்றும் 10 லட்சம் பேர் வருடம் ஒன்றுக்கு காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்கின்ற மேலதிக தகவல் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது இங்கே குறிப்பிட தக்கது .