வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் துறைமுக பிரிவினர்
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் நிறுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ள கிரேன்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள்
நிறுவப்படவில்லையாயின் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் துறைமுக பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதன் தலைவர் எமது செய்திப் பிரிவிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு தலையீடு காரணமாக குறித்த கிரேன்கள் நிறுவப்படாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.