வெளிநாட்டு தமிழ் முதலாளிகளுக்கு வலைவிரிக்கும் – கோட்டா மகிந்தா

Spread the love

வெளிநாட்டு தமிழ் முதலாளிகளுக்கு வலைவிரிக்கும் – கோட்டா மகிந்தா

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வினை வழங்கினால். வெளிநாடுகளில் உள்ள தமிழ் முதலீட்டாளர்கள் மீண்டும் நாட்டிற்கு வந்து முதலீடுகளை மேற்கொள்வார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

வரவு செலவுதிட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் மூன்றாம் நாள் விவாதம் இன்று இடம்பெற்றது. விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் 83

கலவரத்தினைத் தொடர்ந்து நாட்டை விட்டுச்சென்றவர்கள் நாட்டுக்கு திரும்பிவர வேண்டுமாயின் முதலில் அவர்களுக்கு இங்கு

வாழ்வதற்குமுடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

என்னிடமும் பல்வேறு திட்டங்கள் இருகின்றன. அவற்றினை செயற்படுத்துவது குறித்து நாங்கள் பேசுவோம். அவற்றினை

செயற்படுத்துவோம். நானும் பரிந்துரைகளை முன்வைக்க தயாராகவே உள்ளேன்.

உண்மையாக இங்கு இருக்கின்றவர்கள் ஜனாதிபதி, தோல்வியடைந்துள்ளார். தோல்வியடையவில்லை என பேசுகின்றார்கள். ஜனாதிபதி இன்னும் தோல்வியடையவில்லை. ஏனென்றால் ஒரு வருடம் தான் கடந்துள்ளது. இன்னும் 4வருடங்கள் இருக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார்

இந்த வரவு செலவுத் திட்டத்தில் அரச வருமானத்துக்கும் அரச செலவினத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது. இந்த வேறுபாட்டை 3332நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் கடன்

பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டமானது துண்டுவிழும் தொகையில் உள்ளது. . இது அப்பாவி பொது மக்களின் சுமத்தப்படும் சுமை என்ற அச்சம் எழுகிறது.

கொவிட் 19 வைரசியினால் விழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கும், மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் எந்தவிதமான நிரந்தர

தீர்வும் இங்கு முன்வைக்கப்படவில்லை. இந்த வரவு செலவுத்திட்டத்தில் பாமர மக்களுக்கு எவ்வித நிவாரணங்களும் இல்லை. அத்துடன் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் இல்லை

மற்றும் மலையக மக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான எந்த விடயங்களும் இதில் குறிப்பிடப்படாதது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இவற்றை மூடி மறைப்பதற்காக சம்பள உயர்வு முன்மொழிவை மட்டுமே இந்த வரவு-செலவுத் திட்டத்தில் உள்வாங்கி இருக்கிறார்கள். இந்த சம்பள உயர்வு முன்மொழிவும் வரவுசெலவுத்

திட்டத்தின் மூலமாக கொடுக்க முடியாது. இது ஐந்து வருடங்களுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகும். இன்றைய விலைவாசி உயர்வு மற்றும் நாணய மதிப்பு

போன்றவற்றுடன் ஒப்பிடும்போது 1,300 ரூபா வழங்கப்பட வேண்டும். ஆகவே இதனைத் தாண்டி இன்னும் ஆயிரம் ரூபா வில் முடக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே பிரதமர் அவர்கள்

உறுதியளித்த படி அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் உள்ளடக்கப்பட வேண்டும். ஏனென்றால் பிரதமர் அவர்கள் இந்த சபையிலேயே கூறிய பிறகு பெருந்தோட்ட

கம்பனிகள் 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க முடியாது என்று கூறியிருக்கின்றார்கள் எனவே பிரதமர் அவர்கள் நேரடியாக தலையிட்டு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்

ஒரு சகாப்த காலத்துக்கு மேலாக மகிந்த ராஜபக்ஷ சகோதரர்களினால் நாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டின் மூலம் நாட்டின் கடன் தொகை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

இதில் உழஎனை-19 ஆல் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவது பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. அத்துடன் நாட்டில் வருமானம் வரும் எந்த தகவல்களும் பாதீட்டில்

உள்ளடக்கப்படவில்லை. இன்றைய அரசாங்கம் ஆட்சியைப் பிடிப்பதற்காக மத்திய வங்கி imran parlimentகொள்ளைகளையும், ஈஸ்டர் தாக்குதலையும் பற்றி பேசுகின்றார்கள். எமது அரசாங்கம்

மத்திய வங்கி கொள்ளைலயில் சம்பந்தப்பட்டிருப்பதாக பேசுகிறார்கள். நீங்கள் அரசாங்கத்தில் இருந்துகொண்டு ஏன் இன்னும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பழி சுமத்திக் கொண்டு இருக்கின்றீர்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தை குறை கூறிக் கொண்டு இருக்காமல் இந்த குற்றங்கள் உண்மையானவையாக இருந்தால் அந்த குற்றங்களுக்கு பின்னால் உள்ள குற்றவாளிகளை எப்படி வெளிப்படுத்துவது

என்பதில் கவனம் செலுத்த வேண்டும். நல்லாட்சியிலும் எத்தனையோ நல்ல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் தவறுகளும் நடந்திருக்கின்றன. அதற்கான ஒரு

பிராயச்சித்தமாக தான் இன்று இந்த அரசாங்கம். ஆகையால் நீங்களும் அவ்வாறான தவறுகள் விடாமல் எதிர்காலங்களில் மக்களால் போற்றும் கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

முழு உலகமும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளது சர்வதேச போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது தொழிற்சாலைகளும் வர்ததகநிலையங்களும் மூடப்பட்டுள்ளன. வர்த்தக நடவடிக்கைகள்

இடை நிறுத்தப்பட்டுள்ளன எங்கள் மக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தொழிலகங்கள் மூடப்பட்டுள்ளன என்பதை நாங்கள்

உணரவேண்டும் மனிங் சந்தையில் நாளாந்தம் உழைப்பவர்கள் முதல் தனது முச்சக்கர வண்டியை லீசிங்கில் பெற்ற முச்சக்கர வண்டி சாரதிகள் முதல் நாளாந்த வருமானம் உழைப்பவர்கள்

அனைவரும் பெரும் துயரத்தில் உள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் தமது பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் உதவவேண்டும்

இளம் தலைவராகயிருந்தவேளை மகிந்த ராஜபக்ச மனித உரிமைக்காக போராடி ஜெனீவா வரை சென்றவர் இதன் காரணமாக மனித உரிமைகளிற்காக குரல்கொடுத்த மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் அதற்கு எதிரான வழியில் பயணிப்பது நல்லதல்ல அவ்வாறான அரசாங்கமொன்றை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்

Author: நலன் விரும்பி

Leave a Reply