லண்டனுக்குள் நுழைய முயன்ற அகதிகள் 31 பேர் கடலில் மூழ்கி மரணம்

Spread the love

லண்டனுக்குள் நுழைய முயன்ற அகதிகள் 31 பேர் கடலில் மூழ்கி மரணம்


பிரிட்டன் ,டோவர் ; பிரான்சில் இருந்து ஆங்கில கால்வாயை கடந்து லண்டனுக்குள் படகு மூலம் நுழைய முயன்ற அகதிகளில் 31 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

பலியானவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர் .

இவ்வாறு கடலில் மூழ்கிய அகதிகளில் சிசு ஒன்றும் உள்ளடங்கும் என தெரிவிக்க படுகிறது.

லண்டனுக்குள் கடல்வழியாக நுழையும் அகதிகள் ரூவாண்டாவுக்கு அனுப்பி வைக்க படும் நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது .

அவ்வாறான நிலையிலும் பிரான்ஸ் கடலை கடந்து லண்டனுக்குள் அகதிகள் பெருமளவில் நுழைந்த வண்ணம் உள்ளனர்.

அகதிகளின் நுழைவு பிரிட்டன் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

இதனால் அவர்களை கறுப்பின நாடான ரூவாண்டாவுக்கு அனுப்பி வைக்கும் தீவிர நகர்வில் பிரிட்டன் ஈடுபட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

Leave a Reply