பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் பெண்கள்
இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நல்லூர் முன் வீதியில் அமைந்துள்ள தங்குமிட
விடுதியில் தனித்திருந்து இரு பெண்களை யாழ்ப்பாணம்
பொலிஸார் இன்று (13) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன்,
கைதுசெய்யப்பட்ட இரு பெண்களும் 20 மற்றும் 25 வயது கொழும்பு மற்றும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.