
யார்குழு நான் அர்ச்சுனா அறிவிப்பு
யார்குழு நான் அர்ச்சுனா அறிவிப்பு ,மருத்துவர் அர்ச்சுனா யார் குழு நான் என்கின்ற தலைப்பின் கீழ் ஒரு காணொளியை பதிவு செய்துள்ளார் .
அதன் ஊடாக அவர் மூன்று வெளிநாட்டு குழுக்களாக புலிகள் அணிகள் மற்றும் நாம் தமிழர் உள்ளதாக அறிவித்துள்ளார் .
இதில் முக்கிய தலைவர் மகளை முன்னிறுத்திய துவராக ,மற்றும் நாம் தமிழர் குழு ,இரண்டாவது துவராகா இல்லை என்ற குழு ,நாம் தமிழர் கட்சி என்ற குழு என்ற விடயத்தை மருத்துவர் அர்ச்சுனா தெளிவு படுத்தியுள்ளார் .
இதில் ஐயா இதில் தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள் என்பதை நாம் சுட்டி காட்ட விழைகின்றோம் .
புலம் பெயர் தேசத்தில் உள்ள குழுக்களை நாங்கள் இவ்வாறு அழைக்கின்றோம் .
அதில் அனைத்துலக தலைமை செயலகம் ,தலைமை செயலகம் ,நாடு கடந்த அரசாங்கம் ,மற்றும் நாம் தமிழர் கட்சி பாசறை என்பன இயக்கம் பெறுகின்றன .
எனவே நீங்கள் கூறிய குழு என்பதற்குள் நாம் தமிழர் கட்சி உள்ளடக்க முடியாது .
காரணம் அது ஒரு காட்சியாக தேர்தலில் போட்டியிட்டு இயங்குகிறது .அது போன்றே நாடு கடந்த அரசாங்கமும் காணப்படுகிறது ,அப்படி நோக்கின் அவை அரசியல் கட்சி என்ற வடத்திற்குள்; அடக்கி விடலாம் .
அடுத்து அனைத்துலக செயலகம் என்பது ,இது விடுதலை புலிகள் தாயகத்தில் இயக்கம் பெறுகின்ற பொழுது உருவாக்கம் பெற்ற முதலாவது புலிகளின் சர்வதேச கட்டமைமைப்பு ,அதனை வலையமைப்பு என கூறலாம் .
இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் உருவாக்கம் பெற்றதே தலைமைச்செயலகம் மற்றும் நாடு கடந்த அரசாகும் .
எனவே இதனை புரிந்து கொண்டு தரவுகளை செம்மையாக வழங்குங்கள் ,உங்களை பின் தொடரும் இளைய சமுதாயம் தவறான தகவலை பெற்று குழப்பத்தில் ஆழ்ந்து விடுவார்கள் .
தவிர துவராகா குழு என்பதே மேலே கூறப்பட்ட ,அனைத்துலக சார்ந்த குழுவாக காணப்படுகிறது .
அதில் பாவலர் காசி ஆனந்தன் , ,திரைப்பட இயக்குனர் கவுதமன் மற்றும் மாவீரர் வியாபரிகள் என பலர் உள்ளடக்கம் பெற்றுள்ளனர் .
எனவே இதனை ஐயா மருத்துவர் அர்ச்சுனா தாரவுகளை தெளிவாக தெரிந்து அறிந்து கொண்டு விடையத்தை பகிருங்கள் .
உங்கள் அண்ணா லண்டனில் உள்ள அவர்களை கேட்டாலே இது பல விடயங்கள் தெளிவு படுத்துவார் என நம்புகிறேன் .
தாரவுகள் பிழையாகும் பொழுது நீங்கள் சர்ச்ச்சைக்குள் சிக்கி விடக்கூடாது என்பத்திலும் ,உங்களை ஆதரிக்கும் நான் ,மற்றும் நாம், எதிரிகளுக்கு கருத்து அல்லது பதில் கூற முடியாத நெருக்கடியை நீங்கள் ஏற்படுத்தி விடாதீர்கள் என்பதை இந்த பத்தியின் ஊடாக கேட்டு கொள்கிறேன் .
விடுதலையின் கனவை விரித்து மலரும் நீங்கள் கறைபடிந்து , காணாமல் போய்விட கூடாது என்பதில் உங்களை ஆதரிக்கும் எமக்கும் கரிசனை உள்ளது .
ஆதலால் கொஞ்சம் இதனை கருத்தில் கொள்ளுங்கள் மருத்துவர் அர்ச்சுனா அவர்களே .
நாம் எமது டிக் டாக் live இல் நாள்தோறும் உங்களுக்கு ஆதரவை பேசி வருகிறோம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் நன்றி .எதிரி இணையம்
- சஜித் இன்று எழுப்பிய கேள்வி
- கையிருப்பு சொத்துக்களில் வீழ்ச்சி
- ஜப்பான் தென்கொரிய பொருட்களுக்கு 25%வரிவிதிப்பு
- பொலிஸ் சேவையில் 28000 வெற்றிடங்கள்
- 5வயது சிறுவன் திடீர் மரணம்
- மஹேஷிவிஜேரத்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
- முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்
- 2027முதல் இலங்கையில் புதிய வரி
- கோடீஸ்வர தொழிலதிபர் கொலை
- மாணவனை தாக்கிய மாணவன்